லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Wednesday, December 22, 2004

கதை

கும்பகோணம் - சுவாமிமலை சாலை - காலை.

நடமாட்டம் இல்லை.

தூரத்தில் ஒரு புள்ளி. புள்ளி பெரிதாகிறது.
புள்ளி ஒரு சைக்கிளில் வரும் அம்பி ஆகி, விரைகிறது.
அம்பியோடு நாமும் விரைகிறோம்.
பதிக முணுகலுடன் அம்பி விரைகிறான்.

சற்று நேரத்தில் அம்பியின் வேகம் குறையத்துடங்குகிறது.
தூரத்தில், சாலையை ஓட்டி
பாட்டி ஒருத்தி.

அம்பியின் சைக்கிள் நிற்கிறது.
அது பாட்டியின் இட்லி கடை.

முதல் ஏடின் ஒரு இட்லி யெடுத்தவாரே,
பாட்டி:

வா கண்ணு

--------------------------------------------------------------------------------

பஸ் ஒன்றில் - காலை



ஆசின் அழகாக சிரிக்கிராள். பெரிய விரல் ஓன்று அவள் தலை கோதுகிறது.
ஆசின் அதிருகிறாள். விரல் அதிருகிறது.

விரல் போய் கை வருகிறது.
கை, ஆசின் அட்டை படம் கொண்ட ஆனந்த விகடனை விளக்க ,
நோக்கியா செல்போன்.

"1 message
received".

செல்போன் பார்க்கும் முருகன் முகம் , தூக்கம் கலையாமல்.
முருகன் அலுப்புடன் செல்லின் கீஸை அமுத்தினான்.

க்ரிரிரிரிரிரிரிச்ச்ச்ச், பஸ் திடீரென்று நிற்க, முருகன் கையிலிருந்து செல்
தவறுகிறது.
செல் விழும் ஒலி

முருகன் :

ஷிட்

செல்லை குணிந்து தேட முற்படுகையில், பஸ்ஸில் ஏதோ பரபரப்பு.
பஸ் நிற்கிறது.
சிலர் கீழே இறங்கினர்.

முருகன் செல்லை தேட முயல்கிறான்.
தென்படவில்லை.
இப்பொழுது பஸ்ஸில் யாரும் இல்லை.
முருகனும் கீழே இறங்கினான்.

பஸ்ஸின் முன் சின்ன கூட்டம்.

குரள் 1 :
நல்லா நசிங்கிடுச்சு

குரள்கள் :
.. நாய் .. பாவம் ..

முருகன் கண்கள் கூட்டத்திலிருந்து விளகி , சாலையின் மையத்தில் இருந்தது.
அவன் பார்வை சாலையைத்தொடும் இடத்தில்,
அவன் செல்.

--------------------------------------------------------------------------------
தாராசுரம் - சன்னதி தெரு - வீட்டின் மாடி கூறையின் உள் - காலை

புத்தகம் இரைந்து கிடக்கும் கட்டில்.
கட்டிலின் பக்கத்தில் மேசை, நாற்காலி, காலியாக.

கதவு திறக்கும் சப்தம்.

குளியல் அறை கதவு திறக்க, துண்டுடன் குமார் நடுங்கியவாரு வெளி நடக்கிறான்.

நேரே மேசைக்கு வந்து பேப்பரை பார்க்கிறான்.

குமார் :

1,2,3, ம்,10, ம்,15, ம்,19 ம் 19
ச்ச மார்க் ஏறவே மாடேன்கிது

கட்டிலில் அமர்ந்து மவுனத்தில் ஆழ்கிரான்.
உணர்ச்சியில்லாமல் முகம்.

அமைதி.

திடீரென்று புருவம் உயருகிறது.
கண்கள் எதையோ உற்று நோக்கத்தொடங்குகிறது.


கோயில் மணி:

டான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


குமார் இப்பொழுது மாடியின் மதிலையொட்டி.
குமாரின் முதுகு மட்டும் தெரிகிறது. தலை குனிந்திருகிறது.

குமார் பார்த்துகொன்டிருந்தது,
ஒரு தண்ணீர் சொம்பு, பக்கத்தில் இரு கற்கள்


-----------------------------------------------------------------------------------
அரசு கலை கல்லூரி மைதானம் - மாலை


சிரிப்பு, அம்பி பலமாக சிரித்தான்.
அருகே கிரிக்கெட் விளையாடி களைத்த ஸ்டம்ப்ஸ், பாட், பால், முருகன், குமார்.

அம்பி:

நான் நெனைகிறேன், உன் செல் பட்டு தான் அந்த நாய் செத்திருக்கும்.

மீன்டும் அம்பி சிரிக்கிறான்.

அமைதி.

முருகன் :

அடங்கு

அமைதி
குமார்:

மச்சி , சொன்னா நம்ப்.. இன்னைக்கு ஒன்னு பார்த்தேன்டா.
ஒரு காக்கா காலைல பார்தேன்டா. மொட்ட மாடீல , செவுத்து மேல.
சொன்னா நம்பமாடீங்க. கல்லத்தூக்கி சொம்புல பொட்டுகிட்டு இருந்தது.
அப்றம் கோயில் மணி சத்தம் கேட்டு ஓடிடுச்சு.
ஏன்னால நம்பவே முடிலடா ?

அமைதி.

அம்பி :

இல்லடா. கலைல இட்லி கடைல ஒரு காக்கா வடைய்ய தூக்கிட்டு போச்சுடா.

அமைதி

அம்பி :

வடைய்ய நரிகிட்ட தொலச்சிட்டு தாகமா வந்திருக்குமோ ?


குமார் :

என்னடா பாட்டி வட சுட்ட கதை'யும், காக்கா கல்லு போட்ட கதை'யும்
நல்லா fit ஆகுது !

அமைதி
அம்பி :

ஆனா நரி எங்கடா ?

அமைதி

முருகன் குரல் மட்டும் :

பஸ்ல அடிபட்டு செத்துடுச்சு

குமாரும், அம்பியும் முருகனை பார்க்க நாமும் பார்க்கிறோம்.
செலை முகர்ந்தவாரு முருகன்.

அமைதி

செல்லை எடுத்த முருகன்,வேகமாக அம்பி மூக்கில் வைத்தான்.

அம்பி மிரல்கிறான்; முகர்கிறான்.
அம்பி முகம் மாறுகிறது.
மெதுவாக,
அம்பி :

வடை. வடை வாசம்.
பாட்டி கடை வடை வாசம்.

அமைதி.

( மங்கலாக )

பாட்டியிடம் இருந்து வடையைத் திருடி காக்கா பறக்கிறது.
அம்பியின் முகம், அதிசயதில்.

( மங்கலாக )

உள்ளங்கையில் செல்.
நிமிர்ந்த முருகன் முகத்தில் புன்னகை.
தரையில் வடை.
கூடதின் மத்தியில் நரி நசுங்கி.

(மங்கலாக)

சொம்பின் மேல் காக்கா.
காக்காவின் வாயில் கல்.

(தெளிவாக)

மைதானம்.
தூரத்தில் அம்பி, குமார், முருகன்.

அமைதி.

காக்கையின் அலறல்:

காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

0 Comments:

Post a Comment

<< Home